'மதுரையில் நடந்தது முருக பக்தர்கள் மாநாடு அல்ல, மோடி பக்தர்கள் மாநாடு': திருமாவளவன் பேச்சு..! - Seithipunal
Seithipunal


பெரியாரை விமர்சித்த பிறகும் அவர்களோடு சேர்ந்து பயணிக்கப் போகிறார்களா..? என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு அ.தி.மு.க.வினர் தெரிவிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது அவர் இது குறித்து பேசியதாவது: "மதுரையில் நடந்தது முருக பக்தர்கள் மாநாடு அல்ல, மோடி பக்தர்கள் மாநாடு என்று குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, முருக பக்தர்களின் மாநாடு நடந்திருந்தால் தமிழ் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் பெரியார், அண்ணா போன்றவர்களை விமர்சிக்கும் வீடியோ ஒளிபரப்பப்பட்டிருக்காது. அந்த மாநாட்டில் அ.தி.மு.க.வினர் பங்கேற்றது அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், அண்ணாவை விமர்சித்தாலும், பெரியாரை விமர்சித்தாலும் தேர்தல் ஆதாயம் கருதி பா.ஜ.க.வுடன்தான் கூட்டணி அமைப்போம் என்று அ.தி.மு.க. இருப்பது அதிர்ச்சியாக உள்ளது என்று திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவினர் இது குறித்து சிந்திக்க வேண்டும் என்றும், அண்ணா, பெரியாரை விமர்சித்த பிறகும் அவர்களோடு சேர்ந்து பயணிக்கப் போகிறார்களா..? என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு அ.தி.மு.க.வினர் தெரிவிக்க வேண்டும் எனவும் செய்தியாளர்களிடம்  திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thirumavalavan says its not a Muruga devotees conference its a Modi devotees conference


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->