திமுகவிடம் 3 தொகுதிகளை "திரும்ப திரும்ப" கேட்போம்... அடம்பிடிக்கும் திருமாவளவன்.!!
Thirumavalavan said we request 3 seats in DMK alliance again
எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தல் பணி தொடர்பாக 4 குழுக்களை நியமித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்மட்ட குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கூட்டணி கட்சிகளுடன் திமுக தேர்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வரும் சூழலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை இன்று ஆலோசனைக்கு அழைத்திருந்தது திமுக தலைமை.
திமுகவின் அழைப்பை நிராகரித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி திடீரென உயர்மட்ட குழுவை கூட்டியது. இந்த உயர் மட்டக் குழுவில் திமுகவுடனான தொகுதி பங்கீட்டில் அவசரம் காட்ட வேணாம் என கட்சி நிர்வாகிகள் திருமாவளவனை கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திமுக உடனான தொகுதி பங்கேட்டில் அவசரம் காட்ட வேண்டாம் என கட்சி நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.
அதன் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உடனான தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். இந்த தேர்தலிலும் திமுகவுடன் தொடர்ந்து பயணிப்போம் அகில இந்திய தலை அளவில் இந்தியா கூட்டணி தான் இருக்கிறோம். எந்த மாற்றமும் இல்லை. திமுக கூட்டணி சின்ன சிராய்ப்பு கூட ஏற்படாது. எந்த கட்சியும் வெளியேறப் போவதில்லை. நாங்கள் விரும்பும் தொகுதிகளை திமுகவிடம் திரும்பத் திரும்ப கேட்போம்" என திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி உள்ளார்.
English Summary
Thirumavalavan said we request 3 seats in DMK alliance again