நீங்க ஊழல் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்குத்தான் சென்றீர்களா? தங்கம் தென்னரசு பதிலடி! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் வெளிநாடு பயணம் குறித்து அவதூறு கருது தெரிவித்துள்ளதாக, அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். 

எடப்பாடி பழனிசாமி மற்றும் மகனும் அமைச்சர் சகாக்களும் ஏன் வெளிநாட்டிற்கு சென்றார்கள் என்று எடப்பாடி பழனிசாமி விளக்கவேண்டும் என்றும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார். 

அதிமுக ஆட்சியின் ஊழல்களை மறைக்கவும், முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கைத் திசைதிருப்பவுமே அவதூறு பரப்பப்படுவதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார். 

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வெளிநாட்டிற்கு சென்றுள்ள முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் பற்றி அவதூறு பரப்புவதா?

அதிமுக ஆட்சியில் கபட நாடகம் நடத்திச் “சுற்றுலா” சென்றது ஊழல் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்குத்தானா? 

தொழில்முதலீடு பெற்று, தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கச் சென்றுள்ள முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் பற்றி தவறாக பேசுவதா? 

அதிமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வர விரும்பிய தொழில் நிறுவனங்களையும் அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி" என்று, தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thangam thennarasu reply to EdappadiPalaniswami for CM stalin Singapore visit


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->