அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த தமிழக முத்தரையர் சங்கம்.!
tamilnadu mutharaiyar sangam support admk in parliment election
தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் இடம்பெறுவது தொடர்பான அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இது தொடர்பாக புதிய கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒரு வெற்றிக் கூட்டணியை அமைப்பதே எங்கள் நோக்கம்.
எங்களுக்கு எத்தனை தொகுதிகள் வேண்டும் என்று குழுவிடம் தெரிவித்துள்ளோம், அதிமுகவுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் புரட்சி பாரதம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் அதிமுக கூட்டணியில் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு முத்தரையர் சங்கம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் முத்தரையர் சமூகத்தின் வாக்கு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக கூட்டணி, சட்டசபை தேர்தலை சந்தித்த அதே கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது. கூட்டணியை இறுதி செய்ய பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரைக்கும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் மியூசிக் உடனான தொகுதி பங்கீடு இன்னும் இழுபறியில் உள்ளது.
English Summary
tamilnadu mutharaiyar sangam support admk in parliment election