தமிழ்நாட்டில் இனி அடிக்கடி கரன்ட் கட்டாகும் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் என்பதை நான் ஏற்கமாட்டேன். இந்திய அரசமைப்பு சட்டத்தின் படி, நீட் விலக்கு மசோதாவை மீண்டும் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக ஆளுநர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார். இது திமுகவுக்கவோ அல்லது அவர்களின் பணிக்காகவோ அனுப்பி வைப்பதாக ஆளுநர் சொல்லவில்லை என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் பி ஜி ஆர் எனர்ஜி என்ற தகுதியே இல்லாத நிறுவனத்திற்கு ரூபாய் 4,400 கோடி கான்ட்ராக்டை தமிழக மின்வாரியம் கொடுத்திருக்கிறது. கோபாலபுரத்தில் தொடர்பு இருப்பதாலேயே பி ஜி ஆர் நிறுவனத்திற்கு காண்ட்ராக்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இனி தமிழகத்தில் அடிக்கடி மின்வெட்டு வரலாம். அதனால் மக்கள் வீடுகளில் யுபிஎஸ் மற்றும் ஜெனரேட்டர்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu future power cut problem BJP Annamalai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->