ப.சிதம்பரத்திற்கு அடுத்து என்ன நடக்க போகின்றது.? சூசகத்தை வெளியிட்ட தமிழிசை.!
tamilisai says about p.chidambaram
முன்னதாக ஆலோசனை கூட்டம் ஒன்றில், கலந்து கொண்டு பேசிய தமிழிசை, "மேலும் முன்னதாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் இதற்காக திகார் ஜெயில் தயாராகி வருகிறது அவரது குடும்பம் குடும்பமாக விளங்கிவருகிறது பாராளுமன்ற தேர்தலின் போது பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்து மிகப்பெரிய தவறு செய்துவிட்டார் ஒரு கட்சிக்கு தலைவராக இருக்க முடியாது அவர் நாட்டின் பிரதமராக வர முடியுமா என கேள்வி எழுப்பி உள்ளார்
தற்போது வேலூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தமிழிசை சவுந்தரராஜன், "இந்திய பொருளாதாரத்தை சரிசெய்ய பல்வேறு நடவடிக்கையில் மத்திய அரசு எடுத்துக் கொண்டு இருக்கிறது. ரிசர்வ் வங்கியிலிருந்து எதற்காக நிதி பெற்றிருக்கிறது என்று கேட்கின்றனர்.
பொருளாதார மேதை என கூறப்படும் பா சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது ரிசர்வ் வங்கியிலிருந்து 5 முறை பணம் பெற்று இருக்கின்றார். தமிழ் நாட்டிற்காக அவர் எதுவும் செய்யவில்லை. முதலமைச்சர் கூறியதை போல அவர் பாரமாக தான் இருக்கின்றார். பொருளாதார பின்னடைவை சரி செய்ய என்ன முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்பதை தான் கருத்தில் கொள்ளவேண்டும். முதல்வரின் வெளிநாடு பயணம் வரவேற்கத்தக்கது. ஆனால், ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வெளிநாடு செல்வதால் என்ன பயன்?
முதலீடுகளை ஈர்ப்பதற்காக தான் வெளிநாடு செல்கிறார். இதன் மூலமாக தமிழ்நாட்டிற்கு முன்னேற்றம் ஏற்படும். தமிழ்நாட்டில் எந்த ஒரு பிரச்சனையையும் அரசியலாக்கி கொண்டிருக்கின்றன.ர் திமுக அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மக்கள் நலனுக்காக தான் நாம் ஆதரவு தெரிவிக்கிறோம்." என்று அவர் கூறியுள்ளார்.
English Summary
tamilisai says about p.chidambaram