தமிழர்கள் பிரதமர் ஆவதை தடுத்தது திமுகதான்.! அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்.!!!
tamilisai says about dmk
சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, தமிழர்கள் பிரதமர் ஆவதை தடுத்தது திமுகதான். அப்துல்கலாம் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆவதையும் தடுத்தது திமுகதான்.
திமுகவின் பழைய கதைகளை எல்லாம் தோண்டினால் ஸ்டாலினால் திண்ணை பிரசாரத்திற்கு கூட போக முடியாது. மேலும் வீட்டை விட்டு வெளியே கூட போகமுடியாது. அரைநாள் உண்ணாவிரம் இருந்து இலங்கை தமிழகர்களுக்காக என்ன நாடகம் ஆடினார்கள் என்பது மக்களுக்கு தெரியும். திமுக என்றாலே நாடக அரசியல்தான்.
மக்கள் எனக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். நிச்சயமாக தூத்துக்குடியில் வெற்றி பெறுவேன். தமிழகத்தில் எங்கள் கூட்டணி வெற்றி பெரும். திமுக அமமுக கூட்டணி என்று நாங்கள் கூறியது இப்போது உண்மையாகிவிட்டது என்று கூறினார்.