தமிழக அரசு இன்று காலை போட்ட அதிரடி தடை உத்தரவு.! நீங்க இப்படி ஆப்பு வைப்பீங்கன்னு, நாங்க கனவுல கூட நினைக்கல முதல்வரே.!
Tamil Nadu govt new order
வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் இரண்டாம் அலை பரவி வருவதால் தமிழகத்தில் நோய்த் தடுப்புப் பணிகளை தமிழக அரசு மேலும் தீவிரப்படுத்தி, இன்று காலை ஒரு உதவி பிறப்பித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகள் நவம்பர் 16 முதல் செயல்படும் என்ற அறிவிக்கப்பட்டிருந்த உத்தரவையும் ரத்து செய்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு இன்று காலை பிறப்பித்துள்ள மேலும் ஒரு உத்தரவில், சமுதாய, அரசியல், பொழுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களில் அனுமதிக்கப்படும் முந்தய உத்தரவை ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.
சமுதாய, அரசியல், பொழுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களில் 100 பேருக்கு மிகாமல் பங்கேற்கும் வகையில் அனுமதிக்கப்பட்டிருந்த உத்தரவு ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இன்று தமிழக அரசு பிறப்பித்த இந்த உத்தரவு காரணமாக, தமிழக பாஜக திட்டமிட்டு இருந்த வேல் யாத்திரைக்கு அனுமதி கிடைக்கவே இனி வாய்ப்பு இல்லை என்று உறுதியாகியுள்ளது. மேலும் இந்த உத்தரவே வேல் யாத்திரைக்கு தடை விதிக்க தான் என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் குமுறி வருகின்றனர்.
English Summary
Tamil Nadu govt new order