சூரியன் ஒருபோதும் மறையாது… அ.தி.மு.க.க்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்! - வைகோ அதிரடி பேச்சு - Seithipunal
Seithipunal


சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அரசியல் களத்தை சூடுபிடிக்கச் செய்யும் வகையில் கடுமையான கருத்துகளை முன்வைத்தார்.அவர் பேசுகையில், “சூரியன் எப்போதும் மறையாது.

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததற்காக அ.தி.மு.க.வுக்கு மக்கள் தேர்தலில் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் நாற்காலி கிடைக்குமா என்பதே இப்போது பெரிய கேள்விக்குறி” என்று சாடினார்.

மேலும், “திராவிட இயக்கம் இருக்காது என்று உள்துறை அமைச்சர் பேசுவது வரம்பு மீறிய கருத்து. அது ஜனநாயகத்துக்கு எதிரானது” என கடும் கண்டனம் தெரிவித்தார்.

விஜய் தலைமையிலான த.வெ.க. குறித்து அவர், “அந்தக் கட்சியின் உண்மையான தாக்கம் எவ்வளவு என்பது தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே தெரியும்.

அப்போது தான் யார் எங்கு நிற்கிறார்கள் என்பது வெளிப்படும்” என்று பொருள்படக் கூறினார்.வைகோவின் இந்த பேச்சு, தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sun never set people give fitting reply AIADMK Vaiko fiery speech


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->