#BigBreaking || பதவி விலக்கிவிட்டு வேட்புமனு தாக்கல் செய்யுங்க., மீறினால் தகுதி நீக்கம், பதவி பறிப்பு - தேர்தல் ஆணையம்.!
state election commission warning jan
தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி மாதம் 19 மாதம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தேர்தல் ஆணையம் சற்று முன்பு ஒரு கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியிலிருந்து விலகாமல் வேட்புமனு தாக்கல் செய்தால், தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று, தேர்தல் ஆணையம் அந்த எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களது பதவியில் இருந்து விலகாமல், நகர்ப்புற தேர்தலில் மனு தாக்கல் செய்தால் நிச்சயம் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று, மாநில தேர்தல் ஆணையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஒருவேளை இவர்கள் வெற்றி பெற்றாலும், வெற்றி வாய்ப்பை இழந்தாலும், ஏற்கனவே அவர்கள் ஊரக உள்ளத்தியில் இருந்த பதவியிலிருந்து நிச்சயம் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று, அந்த எச்சரிக்கையில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
English Summary
state election commission warning jan