ஆடல்.. பாடல்ல ஆரம்பிச்சி.. இப்ப அரசியலுக்கு ஹாய் சொல்லும் ராஜலட்சுமி- செந்தில் தம்பதி.?! நூதன முறையில் பிரச்சாரம்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சுயேச்சை வேட்பாளர் ஒருவரை ஆதரித்து பிரபல நாட்டுப்புற பாடகர்களான செந்தில் ராஜலட்சுமி தம்பதி நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று தமிழகத்தின் அரசியல் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அத்துடன் சுயேச்சை வேட்பாளர்களும் பல்வேறு உத்திகளைக் கையாண்டு வாக்காளர்களை கவரும் வண்ணம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டாவது வார்டு வேட்பாளர் சினிமா மற்றும் நாட்டுப்புற பாடகர்களான செந்தில் ராஜலட்சுமி தம்பதியை வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். 

செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இருவரும் பாடல்கள் பாடி சந்தோஷ் முத்துவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வந்த நிலையில் பொதுமக்கள் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthil ganesh rajalakshmi in campaign


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->