நல்ல ஆளுநர் என்ற பெயர் பெறுவாரா? காத்திருக்கிறோம் - செல்வ பெருந்தகை!
Selvaperunthakai say about TN Governor
தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை இன்று விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தமிழ்நாடு, தமிழகம் சர்ச்சைக்கு ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மிகவும் சிறப்பு. வரவேற்கத்தக்க விஷயம். இதேபோல, தமிழ் நாட்டின் நலன் கருதி சட்டமன்றப் பேரவையின் ஒப்புதலோடு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கும் காலம் கடத்தாமல் உடனே ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும்.
தமிழ்நாட்டின் மக்களின் உயிரோடு விளையாடும் ஆன்லைன் ரம்மி, நீட் போன்ற முக்கிய மசோதாக்களும் அதில் அடங்கும்.
இவற்றிற்கு ஒப்புதல் அளிப்பதன் மூலம் தமிழ்நாடு மக்களின் உயிர், பொருள் ஆகியவற்றின் மீது அக்கறையுள்ள, அவர்களின் நலனுக்கு முன்நிற்கும் ஆளுநர் என்ற பெரும் பெயர் பெறுவார்.
மக்களும் ஆளுநரை வாழ்த்துவார்கள். நல்ல ஆளுநர் என்ற பெயர் பெறுவாரா? காத்திருக்கிறோம்." என்று செல்வ பெருந்தகை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary
Selvaperunthakai say about TN Governor