இதனை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.. - செல்வப் பெருந்தகை பேச்சு.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, 

இந்தியாவில் உள்ள விளிம்பு நிலை மக்களுக்கு, சிறுபான்மை மக்களுக்கு, பா.ஜ.க ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்களை குறித்தும், உப்பு சத்தியாகிரகத்தை குறித்தும் மோடி மற்றும் அண்ணாமலை தெரிந்து கொள்ள வேண்டும்.

பா.ஜ.க தனது வெறுப்பு அரசியலை தமிழகத்தில் புகுத்த நினைக்கிறது. இதனை தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். 

இந்திய மக்கள் ஜாதி, மத அரசியலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ் இன துரோகி அண்ணாமலை தான். கர்நாடகா எம்.பி. தமிழர்கள் மீது பழி சுமத்திய போது அண்ணாமலை அதற்கு எதுவும் சொல்லாமல் இருப்பது ஏன். 

தமிழகத்தின் உரிமை எங்கெல்லாம் பாதிக்கப்படுகிறதோ அங்கே எல்லாம் காங்கிரஸ் கட்சி நிச்சயம் குரல் எழுப்பும். ஒருபோதும் தமிழக உரிமையை விட்டுக் கொடுக்காது. இந்த மக்களவைத் தேர்தல் மூலம் இந்தியாவில் இருந்து பா.ஜ.க ஆட்சி அகற்றப்படும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Selvaperunthagai interview


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->