திருவாரூரில் பதற்றம்: சிறுமியை காதல் வலையில் வீழ்த்திய முகமதுவை., வீடு தேடி சென்று வெட்டிய சிறுமியின் தந்தை.!  - Seithipunal
Seithipunal


சிறுமியை காதல் வலையில் வீழ்த்திய கயவனை, அவன் வீட்டுக்கே சென்று சிறுமியின் தாய், தந்தை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் பள்ளிவாசல் தெரு பகுதியை சேர்ந்தவர் பக்ருதீன் அலி அகமது, இவரின் மகன் முகமது பெமினாஸ். இவர் அதே பகுதியில் மருந்து கடை நடத்திவரும் விஜயகுமார் என்பவரின் மகள் (17 வயது) சிறுமியை காதலித்து வந்துள்ளார்.

இவர்களின் இந்த காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே, இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். முகமது இடம் எனது மகளை காதலிக்கக் கூடாது என்று தொடர்ந்து விஜயகுமார் அறிவுறுத்தி உள்ளார்.

ஆனால், இதனை காதில் வாங்காத முகமது தொடர்ந்து சிறுமியிடம் பழகி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று சிறுமியின் தந்தை விஜயகுமார் மற்றும் தாய் தீபா இருவரும் நேரடியாக முகமது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு முகமது தனது பெற்றோருடன் இருந்துள்ளார். அப்போது, இந்த காதல் விவகாரம் குறித்து தனது கடும் எதிர்ப்பை விஜயகுமார் தெரிவித்துள்ளார். இரு குடும்பத்திற்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், முகமது ஆக்ரோஷமாக பேசியதாக தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் கையில் வைத்திருந்த அரிவாளால் முகமதுவை வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். ரத்த வெள்ளத்தில் துடித்த முகமதுவை அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு முகமதுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது,

இதற்கிடையே, சிறுமியின் தந்தை விஜயகுமார் அடியக்கமங்கலத்தில் வைத்துள்ள மருந்து கடையை,  முகமது உறவினர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைவாக சென்று மோதல் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சிறுமியை காதல் வலையில் வீழ்த்திய கயவனை கொலை செய்ய முயன்றதற்காக சிறுமிகளின் தாய், தந்தை இருவரையும் போலீசார் மயிலாடுதுறையில் வைத்து கைது செய்துள்ளனர். மேலும், விஜயகுமார்- தீபா மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதே சமயத்தில், சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், முகமது மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school girl father attacke to lover


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->