#சற்றுமுன் || கண்ணீருடன் வாக்களித்த சசிகலா.! ஆளும் திமுக மீது கடும் குற்றச்சாட்டு.! - Seithipunal
Seithipunal


சென்னை : தியாகராய நகர், திருமலைப்பிள்ளை ரோடு பகுதி, வித்யோதயா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், சசிகலா தனது வாக்கினை செலுத்தினார். வாக்கு செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவிக்கையில்,

"இந்த முறை தான் நான் தனியாக வந்து வாக்களித்து இருக்கிறேன்., நான் தனியாக வந்து வாக்களித்ததை  நினைத்துக் கொண்டே வந்தேன் (கண்ணீர் தழும்ப கூறினார்).

தற்போதைய தமிழக அரசை பொறுத்தவரை, நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். இது தமிழக அரசும் நடத்தக்கூடிய ஒரு தேர்தல். அதை வைத்து ஆளுங்கட்சியினர் அராஜகம் செய்யக்கூடாது.

காவல்துறையும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழக மக்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும்., அவர்கள் நல்ல முடிவாக எடுப்பார்கள்.

தேர்தல் ஏற்பாடுகள், வசதிகள் அனைத்தும் செய்து விட்டால் மட்டும் போதாது., தேர்தலில் நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று சசிகலா தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SASIKALA VOTTING IN CHENNAI 2022


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->