மீண்டும் அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்த சசிகலா.! குழப்பத்தில் ஓபிஎஸ், இபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


சசிகலா தொடர்ந்து தொண்டர்களுடன் பேசி வரும் நிலையில், நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலாவிடம் போனில் யாரும் பேசினால் இனி கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள். ஏற்கனவே பேசியுள்ள பலரின் ஆடியோவும் உறுதி செய்யப்படும் பட்சத்தில், அவர்களும் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள். அதிமுகவிற்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை அளிக்க சசிகலா முயற்சி செய்கிறார் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரையை சேர்ந்த குபேந்திரன் என்ற ஆதரவாளரிடம் சசிகலா நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது, கட்சிக்காரர்கள் எல்லாம் மிகவும் வருத்தப் படுகிறீர்கள். தொண்டர்கள் எல்லாரும் என்னுடன் இருக்கும் போது கட்சியை அழிய விடமாட்டேன். விரைவில் தொண்டர்களை சந்திக்க வருகிறேன். 

1987 எம்ஜிஆர் இறந்தபோது ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பிரச்சினையை உடனிருந்து எதிர்கொண்டுள்ளேன். அதிலிருந்து மீண்டு வந்து தான் ஆட்சியை அமைத்தோம். எனவே இவர்கள் செய்வது எல்லாம் எனக்கு புதிது அல்ல. ஜெயலலிதா போல் நாமும் தொண்டர்களுடன் வந்து காட்டி, ஆட்சியையும் அமைப்போம். நான் கட்சி பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasikala new audio for ask admk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->