சசிகலா சிறையில் இருந்து வெளிவருவதில் சிக்கல்? தன் தலையில் தானே மண்ணை, அள்ளி போட்டுக்கொண்ட சசிகலா!! - Seithipunal
Seithipunal


சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

சிறையில் சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி விசே‌ஷ சலுகைகள் அளிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா திடீர் சோதனை நடத்தி விதி மீறல்களை கண்டுபிடித்தார். மேலும், இதற்காக சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு சசிகலா லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து விசாரணைக்குழு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அதில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விதிமீறி சசிகலா வெளியே சென்றது குறித்து காவல் அதிகாரி ரூபா கூறிய புகார் உணமை தான் என அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அத்துடன் சசிகலாவுக்காக சிறையில் சமையல் செய்யப்பட்டதும் உண்மை தான் என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sasikala get special offer in jail


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->