உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும்., ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய முக்கிய புள்ளி.! - Seithipunal
Seithipunal


சென்னை, சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைச்சர் அன்பில் மகேஷ், "உதயநிதி ஸ்டாலின் ஒரு தொகுதியில் செயல்படுவது உகந்ததல்ல. அவர் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பயன்படும் வகையில் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியது குறித்து நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அவரை நான் சிறுவயதில் முதல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். 

அவருடைய உற்ற நண்பனாக நான் சொல்கிறேன். அவருடைய ஜீன்., அவருடைய தாத்தா, அப்பாவுடைய ஜீன். கட்சிக்காக உழைப்பதும், அந்த கடமை உணர்ச்சியும் அவருக்கு அதிகம். அவர் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை. அவரை அமைச்சர் ஆக்க வேண்டும்" என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று, காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் தமிழக முதல்வல் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

S R RAJAN LETTER TO CM STALIN


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->