இந்தியாவிற்கான தலைவராக உருவாகிறார்... அண்ணாமலையை புகழ்ந்து தள்ளிய ராஜ்நாத் சிங்..!! - Seithipunal
Seithipunal


விரைவில் நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாடு முழுவதும் மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தை பாஜக நடத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூரில் நடந்த பாஜக சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் இன்று பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய ராஜ்நாத் சிங்  "தமிழ்நாட்டில் எங்கும் அண்ணாமலை, அண்ணாமலை, அண்ணாமலை தான். அவரை பற்றிய உங்களுக்கு சில விஷயங்களை தெரிவிக்க விரும்புகிறேன். நான் பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். ஒருவரை பார்த்த உடனே அவரைப் பற்றி என்னால் சொல்ல முடியும். அண்ணாமலை உங்கள் தமிழ்நாட்டிற்கு மட்டும் தலைவர் இல்லை.  மொத்த இந்தியாவிற்குமான தலைவராக உருவாகிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கட்டளை அண்ணாமலை செயல்படுத்தி வருகிறார். அவரது வேகத்தையும் செயல்முறையையும் பார்க்கும் போது, எவ்வளவு பாராட்டினாலும் தகும். சகோதார சகோதரிகளே ரொம்ப பொறுமையாக அமர்ந்து என்னுடைய உரையை கேட்டீர்கள். இத்தனைக்கும் நான் இந்தியில் பேசினேன். இருந்தாலும் பொறுமையாக கேட்டீர்கள். உங்களுக்கு தலைவணங்கி என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்" என தனது உரையின் போது அண்ணாமலையை புகழ்ந்து தள்ளியுள்ளார். இதனால் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் குஷியில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajnath Singh praised Annamalai is becoming a leader for India


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->