நான் காவியா? பொன்.ராதாகிருஷ்ணன் குறித்து ரஜினி பரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


நடிகர் கமலின் சினிமா அலுவலகத்தில் பாலச்சந்தருக்கு சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் நடிகர் ரஜினி, நாசர், இயக்குனர் மணிரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார், திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவித்தது தொடர்பாக செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த ரஜினி, திருவள்ளுவர் சிலையை வைத்து அரசியல் செய்வது, சர்ச்சையாக்குவது தேவையற்றது என்றும் பாஜக அலுவலகத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்.ஆனால் தமிழகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைகளுக்கு எல்லாம் காவி உடை அணிவிக்க கூடாது என்றார்.

மேலும், எனக்கு காவிச் சாயம் பூசுவதற்க்கான முயற்சி நடைபெற்றுவருகிறது,  நான் மாட்டமாட்டேன். எனக்கு ஒரு போதும் காவிச் சாயம் பூச முடியாது என திட்டவட்டமாக ரஜினி குறிப்பிட்டார்.

வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் ரஜினி மக்கள் மன்றம் போட்டியிட்டது எனவும் பாஜக நிகழ்வுகள் குறித்து இது வரையில் பொன்.ராதாகிருஷ்ணனுடன் நான் பேசியதில்லை என என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini says about thiruvalluvar statue issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->