ராஜேந்திர பாலாஜியின் குடும்பத்தினருக்கு தொந்தரவு அளிக்ககூடாது.! அதிரடி உத்தரவு.!
RAJENDRA BALAJI SISTER CASE
ராஜேந்திர பாலாஜியின் குடும்பத்தினருக்கு போலீசார் தொந்தரவு அளிக்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் ராஜேந்திர பாலாஜியுடன் இருந்த என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீதும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதில், ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார் (38), ரமணன் (34) மற்றும் கார் ஓட்டுநர் ராஜ் குமார் (47) ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும், ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது
இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில், விசாரணை என்ற பெயரில் ராஜேந்திர பாலாஜியின் குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்யக் கூடாது என்று, போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ராஜேந்திர பாலாஜியின் தங்கை லட்சுமி தொடர்ந்த வழக்கில், காவல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த அறிவுரை இந்த அறிவுரை வழங்கியுள்ளது.
வேண்டுமென்றால் குடும்ப உறுப்பினர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரித்துக் கொள்ளலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் அறிவுறுத்தி உள்ளார்.
English Summary
RAJENDRA BALAJI SISTER CASE