ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் வழக்கு., உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.! தமிழக அரசு வைத்த கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், வருகின்ற ஜனவரி மாதம் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆவின், மின்சாரம், இந்து சமய அறநிலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாக, சுமார் 3 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு பலரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி ஏமாற்றியதாக புகார் எழுந்தது.

இதில் தன்னையும் ஏமாற்றியதாக அதிமுக முன்னாள் நிர்வாகி விஜய் நல்லதம்பி, விருதுநகர் மாவட்ட காவல் குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ராஜேந்திரபாலாஜி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்ய தனிப்படை அமைத்தனர்.

இதற்கிடையே ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 17ம் தேதி ராஜேந்திர பாலாஜி முதல் தலைமறைவானார்.

இந்த நிலையில், கடந்த ஜனவரி 5ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் வைத்து ராஜேந்திர பாலாஜியை தமிழக தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே அதே ஜனவரி 5 ஆம் தேதி ராஜேந்திரபாலாஜியின் ஜாமீன் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுக்கு நீதிபதி பல கேள்விகளை எழுப்பினார்.

இந்நிலையில், இந்த வழக்கை இன்று மீண்டும் விசாரணை செய்த உச்சநீதிமன்றத்தில், கூடுதல் ஆவணங்களை பார்த்துவிட்டு பின்னர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்தது. 

இதனையடுத்து, கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் 12 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RAJENDRA BALAJI BAIL CASE IN SUPREME COURT HEARING NOW


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->