மோடியை புதிய பலத்துடன் வீழ்த்துவேன்.! ராகுல் காந்தி தடாலடி.!!
rahul kandhi says about pjb
இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் தொடர்ந்த அவதூறு வழக்கில் மும்பை ஐகோர்ட்டில் நேற்று ஆஜரானார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது நாட்டில் உள்ள ஏழைகள் மற்றும் விவசாயிகள் தொழிலாளர்கள் போன்ற அனைவரின் ஆதரவுடன் எப்போதும் நான் இருப்பேன் பாஜக, மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் க்கு எதிரான போராட்டம் தொடரும். இது ஒரு சித்தாந்த ரீதியான போராட்டம் என்றும் பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக நான் கடந்த 5 ஆண்டுகளில் போராடியதை விட 10 மடங்கு அதிகமான புதிய பலத்துடன் எதிர்கொள்வேன் என்று கூறினார்.
மழைக்காலத்தில் மக்கள் அனுபவித்த பிரச்சனைகளை கையிலெடுத்து போராடுமாறு ராகுல்காந்தி கட்சியினரிடம் கேட்டுக்கொண்டார் காங்கிரஸ் தலைவர்கள் நமது கட்சியின் வாக்கு வங்கிகளை எப்படி பெருக்குவது என்பதை பற்றி சிந்திப்பதே சிறந்ததாக இருக்கும் என்று ராகுல் காந்தி அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.
English Summary
rahul kandhi says about pjb