பா.ஜனதாவில் இணைந்த காரணம்? - ராதிகா சரத்குமார் ஓபன் டாக்.!
Radhika Sarathkumar answer joining bjp
பாரதிய ஜனதா கட்சி சார்பில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது செய்தியாளர்கள், பா.ஜ.கவில் நீங்கள் சேர்ந்தது ஏன் எனவும் முதன் முறையாக வேட்பாளராக இருக்கும் அனுபவம் எப்படி உள்ளது எனவும் கேள்வி எழுப்பினர்.
அதற்கு ராதிகா சரத்குமார், பொதுமக்கள் எல்லா இடங்களிலும் தங்களது அன்பை உணர்த்துகின்றனர். பெண்கள் தங்களின் பிரச்சனைகளை பேசுகிறார்கள்.
வெற்றி பெறுவோம் என்ற முழு நம்பிக்கை எனக்குள் உள்ளது. பா.ஜ.கவில் ஏன் சேரக்கூடாது. பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் நாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் உங்களுக்கு தெரியவில்லையா என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, உங்களுக்கு தொகுதியில் முக்கிய வேட்பாளர் யார் எனவும் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அரசியலில் தொடர்ந்து செயல்படுவீர்களா எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, போட்டியாளர்களை பற்றி நான் சிந்திக்கவில்லை. நான் எங்களது போசனைகளை ஊக்குவிக்கவும் அதை மக்களிடம் பரப்பவும் மட்டுமே முயற்சி செய்கிறேன்.
தேர்தலில் தொடர்வது குறித்து முடிவு செய்ய இன்னும் நேரம் உள்ளது. இப்போது தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே ஒரே இலக்காக உள்ளது என தெரிவித்துள்ளார்.
English Summary
Radhika Sarathkumar answer joining bjp