தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் கருணாநிதி சிலை உடைப்பு.! கொந்தளிப்பில் உடன் பிறப்புகள்.! - Seithipunal
Seithipunal


தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் அண்ணா சிலை மற்றும் கலைஞர் சிலை மர்மநபர்களால் உடைக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் : தி.மு.க.,வின் மாவட்ட அலுவலகத்தில் அண்ணா சிலை மற்றும் கலைஞர் சிலை வைக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை மாவட்ட பொறுப்பாளர் அறைக்குள் மர்ம நபர்கள், இந்த இரு சிலைகளையும் உடைத்து சேதப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

இந்த சிலைகளை இரண்டு மர்ம நபர்கள் உடைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து தி.மு.க. அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்யநாதன் உள்ளிட்ட பொறுப்பாளர்களுக்கு நிர்வாகிகள் தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, புதுக்கோட்டை நகர காவல்நிலையத்தில் திமுகவினர் புகார் அளித்துள்ளனர். திமுக பொறுப்பாளர்கள் உத்தரவின் பேரில் உடைந்த சிலைகள் உடனடியாக அகற்றப்பட்டது. மேலும், அச்சம் காரணமாக புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த சிக்கலால் உடைப்பு சம்மந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தி.மு.க. அலுவலத்திற்கு உள்ளே நுழைந்து சிலைகளை உடைத்த மர்ம நபர்களால் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்மபவம் திமுக தொண்டர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pudukottai karunanithi statue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->