குடியரசு தலைவராக திரௌபதி முர்மு இன்று பதவியேற்பு.. மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை.! - Seithipunal
Seithipunal


நாட்டின் புதிய குடியரசு தலைவராக பொறுப்பேற்க உள்ள திரௌபதி முர்மு டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு இன்று பதவியேற்றுக் கொள்கிறார். பாராளுமன்ற மையம் மண்டபத்தில் காலை 10 மணி அளவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா, திரௌபதி முர்முவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

பதவி ஏற்பு விழாவுக்கு முன்னதாக காலை 9.25 மணியளவில் திரௌபதி முர்மு குடியரசு தலைவர் மாளிகைக்கு வருகிறார். அங்கிருந்து 10.03 மணியளவில் ராம்நாத் கோவிந்துடன் புதிய குடியரசு தலைவரா பதவியேற்க உள்ள திரௌபதி முர்மு நாடாளுமன்றத்திற்கு புறப்படுகின்றனர்.

 இந்த நிலையில், புதிய குடியரசு தலைவராக பதவியேற்புக்கு முன்னதாக டெல்லி ராஜ்கட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் திரௌபதி முர்மு தற்போது மரியாதை செலுத்தினார். காந்தி நினைவிடத்தில் மாலை அணிவித்தும் மலர் தூவியும் திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

President Draupadi Murmu condolences mahatha Ghandhi memorial


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->