கூட்டணி குறித்த செய்தியாளர் கேள்வி.! சூசகமாக பதில் அளித்த பிரேமலதா.! - Seithipunal
Seithipunal


தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செம்மஞ்சேரியில் வெள்ளநீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் உள்ள மக்களை சந்தித்த பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அந்த பேட்டியில், "நிவர் புயல் விவகாரத்தில் தமிழக அரசு உடைய செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக உள்ளது. ஆனால், தாழ்வான பகுதிகளில் இருக்கும் இந்த செம்மஞ்சேரியில் மழை பெய்தால் நீர் சூழும் சூழல் இருக்கின்றது. எனவே, இதனை சரிசெய்ய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று கூறினார். 

அதன் பின்னர் அமித்ஷா வருகையின் பொழுது கூட்டணி கட்சிகள் வருத்தத்தில் இருப்பதாக வெளியான செய்திகள் பற்றி பிரேமலதாவிடம் கேள்வி எழுப்ப அதற்கு அவர், "தற்போது வரை தேமுதிக பாஜக அதிமுக கூட்டணியில் தொடர்கிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஜனவரி மாதம் நடைபெறும் பொதுக்குழுவுக்கு பின்னர் தெரிவிக்கப்படும்." என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

premalatha pressmeet in semmanjeri


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->