#BigBreaking || தலா 3000, 500 ரூபாய் பொங்கல் பரிசு.! சற்றுமுன் உத்தரவிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெற தகுதி உள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள்/ குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 1.1 .2022 முதல் 31 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.


பொங்கல் பரிசாக சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு ரூபாய் 3000 ரூபாயும், ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாய் வழங்கிடவும், சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கவும், 

முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சிறப்பு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ரூபாய் 500 வழங்கவும் தமிழக முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். இதற்காக தமிழக அரசுக்கு 169 .56 கோடி ரூபாய் செலவாகும் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

சி & டி பிரிவை சேர்ந்த பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிடவும் 8,694 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pongal bonus for tn govt staff 2022


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->