சென்னையை தொடர்ந்து மதுரையில்.! வரிந்துகட்டி வந்த விசிக.,வுக்கு நேர்ந்த பரிதாபம்!
police arrested vck members
அண்மையில் பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக எம்.பி திருமாவளவன் மீது, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சிலர் அவர் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் மீது 6 பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், போலீசார் விதித்த தடையை மீறி திருமாவளவனை கண்டித்து சிதம்பரம் நகரில் பாஜக மகளிர் அணி சார்பாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்புவை போலீசார் கைது செய்த, சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டார்.
இதனை அறிந்த பாஜக தொண்டர்கள் அவருக்கு ஆதரவாக அந்த ரிசார்ட் முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த விசிக தொண்டர்கள் அங்கு வந்து பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் கைகலப்பு ஏற்படவே, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அடித்து ஓட விட்டனர்.
இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திருமாவளவனை கண்டித்து போராட்டம் நடத்த வந்த பாஜக தொண்டர்களுக்கும், விடுதலை சிறுத்தை கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜகவினர் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதிக்கவில்லை என்று தெரிவித்தும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வாக்குவாத்த்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து விசிகவினர் 50 பேரை காவல்துறை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.
English Summary
police arrested vck members