நாளைய ஜெயலலிதாவின் நினைவு நாளுக்கு இன்றே திதி கொடுத்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன்..!! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தை ஒட்டி முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் திதி கொடுத்து தர்ப்பணம் செய்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாவது நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதற்காக அதிமுக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில் ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் திதி கொடுத்தார்.

வேதாரண்யக் கடற்கரையில் உள்ள தியான மண்டபத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து காய்கறி, அரிசி, பிண்டம் வைத்து திதி கொடுத்தார். பின்னர் அதனை கொண்டு சென்று வேதாரண்யம் கடலில் கரைத்தார். இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

ஆறுமுகசாமி ஆணையர் அறிக்கையில் ஜெயலலிதா ஒரு நாள் முன்பு முன்னதாகவே இருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் ஓ.எஸ் மணியன் இன்று திதி கொடுத்துள்ளார். இதேபோன்று கடந்த வருடம் ஜெயலலிதாவின் அண்ணன் மகனும் திதி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OS Manian gave didti today for Jayalalitha memorial day


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->