#BREAKING | கட்சி, சின்னம் எங்களுடையது! உண்மையான அதிமுக நாங்கள்தான் - பீதியை கிளப்பும் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


உண்மையான அதிமுக நாங்கள்தான் என்று ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்தியலிங்கம் திருச்சியில் பேட்டி அளித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற தற்போதைய தீர்ப்புகளின் படி அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

தேர்தல் ஆணையமும் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும், அதிமுக பொதுக்குழுவில் ஏற்றப்பட்ட தீர்மானங்களின் படி ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது.

இந்த நிலையில், வருகின்ற 24 ஆம் தேதி திருச்சியில் ஓ பன்னீர்செல்வம் தர்மயுத்த மாநாட்டை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். அதற்கான பணிகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.

ஓபிஎஸ் நடத்த உள்ள இந்த மாநாட்டில் அதிமுகவின் கொடி, சின்னம் மற்றும் அதிமுகவின் பெயரை பயன்படுத்த கூடாது என்று, அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்திருந்தார்.

திருச்சியில் நாளை மறுநாள் ஓபிஎஸ் மாநாடு நடத்த அனுமதிக்க கூடாது என்று அதிமுக தலைப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், திருச்சியில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்தியலிங்கம் தெரிவித்தாவது, "உண்மையான அதிமுக நாங்கள் தான். எடப்பாடி பழனிசாமி தரப்பு எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கு போட்டால் அதை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இரட்டை இலை சின்னம் எங்களுக்குத் தான். அதிமுக கொடி, சின்னத்தை நாங்கள் மாற்றவில்லை .ஏற்கனவே உள்ளதை தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS Side press meet About ADMK 22042023


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->