மீண்டும் ஓ.பி.எஸ் தர்மயுத்தமா? அதிர்ச்சியில் அதிமுகவினர்!! - Seithipunal
Seithipunal


14 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னை திரும்பினார்.

வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மூத்த அமைச்சர்கள் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றனர். அப்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் முதலமைச்சரை வரவேற்க வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஓ.பி.எஸ். விமான நிலையம் வராமல் போனது அதிமுகவினர் மத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, விமான நிலையத்தில் வந்திறங்கிய அதிமுக தொண்டர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மாலைகளை அணிவித்து, மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். ஓ.பி.எஸ். வராமல் போனதிற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. மேலும், ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ் மத்தில் பனிப்போர் நிலவி வருவதாக கூறப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops not welcoming eps in airport


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->