எம்.ஜி.ஆர்., பிறந்த நாள்: ஓபிஎஸ்., இபிஎஸ்., வெளியிட்ட செய்தி.!
ops eps tweet about mgr bday
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளான இன்று தமிழகம் முழுவதும் அவரின் நினைவை போற்றும் விதமாக பொது மக்கள், அரசியல் கட்சிகள் அவரின் உருவ படத்துக்கும், அவரின் உருவ சிலைக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "ஏழை, எளிய மக்களுக்காக நல்ல பல திட்டங்கள் வகுத்து, மக்கள் நலனுக்காகவே உழைத்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 104-வது பிறந்ததினத்தையொட்டி இன்று முகாம் அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்.
மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவர் புரட்சித்தலைவர் MGR அவர்களது 104வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, கிண்டி, தமிழ்நாடு டாக்டர் MGR மருத்துவ பல்கலைக்கழக வளாகத்திலுள்ள புரட்சித்தலைவர் MGR அவர்களது திருவருவச் சிலை, திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினேன்." என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "கழக நிறுவனத்தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்களின் நெஞ்சமெல்லாம் நிறைந்தவருமான நமது மக்கள்திலகம் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாளில், பொன்மனச்செம்மல் இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை போற்றி வணங்குகிறேன்.
ஏழைகளின் துயர்துடைக்க அவதரித்த இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்ததினத்தையொட்டி சென்னை தலைமை கழக அலுவலக வளாகத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தி, கழக கொடியினை ஏற்றிவைத்து, இனிப்பு வழங்கினேன்." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
ops eps tweet about mgr bday