எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பயனற்ற அறிக்கை - போட்டு தாக்கிய ஓ.பி.எஸ்.!!
Ops criticized tn agriculture budget
தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2024-25 விவசாயிகளின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யாத பயனற்ற அறிக்கை என முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் விமானம் செய்துள்ளார். மேலும் 2024-2025 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை விவசாயிகளிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேளாண்மைக்கென்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்ற பெருமையைத் தவிர, வேறு பயனேதும் இந்த பட்ஜெட்டில் இல்லை என விவசாயிகள் பலரும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் உணவுப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது அதுகுறித்து எவ்விதமான அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை" என விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
Ops criticized tn agriculture budget