ஊர்ந்து, ஊர்ந்து பதவி வாங்கினார் பழனிசாமி.! போட்டு தாக்கிய ஓபிஎஸ்.!!
ops criticized aiadmk eps
காஞ்சிபுரத்தில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஓபிஎஸ் "எடப்பாடி பழனிசாமி தாமாக முன் வந்து பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும்.
தமிழ்நாட்டில் உள்ள அத்தனை தொண்டர்களும் வெகுண்டெழுந்து சட்டவிதிகளை எப்படி மாற்றலாம் என கடும் கோபத்தில் உள்ளனர். எடப்பாடி பழனிசாமிஅதிமுகவை தொடங்கினாரா? வளர்த்தாரா? தியாகம் செய்தாரா? எதுவும் இல்லை. முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி எப்படி ஊர்ந்து, ஊர்ந்து பதவி வாங்கினார் என்பதை இந்திய திருநாடே கூர்ந்து கவனித்தது.
பதவி கொடுத்த சின்னமாயே தரக்குறைவான வார்த்தையில் பேசி நம்பிக்கை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. முதல் தர்மயுத்தத்தில் கழகத்தை இணைத்தோம். ஆட்சிக்கு ஒரு சோதனை வரும் போது ஓபிஎஸ் ஆதரவு தேவையாக இருந்தது. ஓபிஎஸ் ஆதரவு இருந்தால்தான் ஆட்சி 5 வாக்குகளில் காப்பாற்றப்பட்டது.
எதிர்த்து நான் ஓட்டு அளித்திருந்தால் அவரால் முதலமைச்சராகி இருக்க முடியாது. தொண்டர்களால் உருவான இயக்கத்தை தான் மட்டுமே எல்லா பதவியும் கையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி" என கடுமையாக சாடியுள்ளார்
English Summary
ops criticized aiadmk eps