நாவை அடக்காவிட்டால் துன்பப்பட நேரிடும்.! ஓபிஎஸ் கடும் எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுக நிறுவன தலைவருமான எம்ஜிஆர் குறித்து அதிமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா சர்ச்சைக்குரிய வகையில் கூறிய கருத்துக்கு அதிமுக தரப்பு கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் தன்னுடைய பங்கிற்கு கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தன்னுடைய திரைப்படங்கள் வாயிலாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தமிழ்நாட்டில் காலூன்றதற்கு முழு காரணமாக விளங்கியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள். முகத்தை காட்டினால் 30 லட்சம் வாக்குகள் கிடைக்கும் என்று அறிஞர் அண்ணாவால் போற்றப்பட்டவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர்.

கட்சிக் கணக்கு கேட்டதற்காக கட்சியை விட்டு நீக்கி பால் குடித்த வீட்டிற்கு பாதகம் செய்த தீய சக்திகளை அகற்றி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை தமிழ்நாட்டில் அமைத்து மக்களுக்கு பொற்கால ஆட்சியை வழங்கியவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள். புரட்சித்தலைவரை கட்சியை விட்டு வெளியேற்றதன் விளைவு அவர் உயிரோடு இருக்கும் வரை திமுகவால் ஆட்சி பொறுப்பிற்கு வர முடியவில்லை. இதற்கு காரணம் மக்கள் அவர் மீது வைத்திருந்த அளவற்ற அன்பு தான்.

தங்கத்தை மண்ணில் இருந்து தோண்டி எடுப்பவர்கள் இப்போது மண்ணைத் தோண்டி தங்கத்தை புதைக்கிறார்கள் என்று புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மறைவின்போது வருணனை செய்யப்பட்டது. அந்த அளவுக்கு மக்களை ஈர்க்கும் காந்த சக்தியை படைத்ததால் தான் மண்ணை விட்டு மறைந்து பல ஆண்டுகள் கடந்தும் மக்களின் நெஞ்சங்களில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் புரட்சித் தலைவர் அவர்கள்.

தன்னலத்தை ஒதுக்கி மக்கள் நலக்காக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் பாடுபட்டதால்தான் மத்திய அரசு அவருக்கு இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதினை அளித்து கவுரவித்தது. மக்களின் மனங்களில் இன்றளவிலும் குடி கொண்டு இருப்பவரும் தறை படியாத கரங்களுக்கு சொந்தக்காரரும் மக்கள் நலனுக்காக மகத்தான திட்டங்களை திட்டி வருமான புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களை குடும்பக் கட்சியான திமுகவைச் சேர்ந்த திரு ஆ.ராசா அவர்கள் இழிவு படுத்தி பேசி உள்ளது கடும் கண்டனத்துக்குரியது.

இவ்வாறு பேசியுள்ள திமுகவுக்கும் ராசாவுக்கும் தான் இருக்கே தவிர‌ புரட்சித் தலைவருக்கு அல்ல. இருப்பினும் இனி வருங்காலங்களில் நாவடக்கத்துடன் பேச திரு ஆ.ராசா அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். நாவடக்கம் இல்லாமல் பேசும் திரு ராசாவுக்கு நாவை அடக்காவிட்டால் சொற்பூற்றம் ஏற்பட்டு துன்பப்பட நேரிடும் என்ற வள்ளுவனின் வாக்கினை சுட்டிக்காட்டுவதோடு வருகின்ற தேர்தலில் இதற்கான விளைவுகளை திமுகவும் திரு ஆ.ராசாவும் சந்திக்க நேரிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ops contemn to DMK mkStalin ARaja


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->