ஓபிஎஸ், சசிகலாவை துயரத்தில் ஆழ்த்திய மரணம்!
OPS and sasikala mourning for demise of wife of JCD Prabhakar
வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர் மனைவி கிரேஸ் ஜெயந்தி ராணி (59) உடல் நலக்குறைவால் இன்று காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஓபிஎஸ் அணியில் இருக்கும் ஜே.சி.டி. பிரபாகர் மனைவியின் மறைவுக்கு ஓ பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சசிகலா வெளியிட்ட இரங்கல் செய்தியில், "வில்லிவாக்கம் தொகுதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கழக மூத்த நிர்வாகியுமான திரு.ஜே சி டி பிரபாகரன் அவர்களின் மனைவி கிரேஸ் ஜெயந்தி ராணி அவர்கள் உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது மனைவியை இழந்து வாடும் திரு.ஜே சி டி பிரபாகரன் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்" என தெரிவித்துள்ளார்.
ஓ பன்னீர்செல்வம் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் துணை ஒருங்கிணைப்பாளர் அன்பு சகோதரர் ஜேசிடி பிரபாகர் மனைவி திருமதி கிரேஸ் ஜெயந்தி ராணி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து ஆற்றொண்ணாத் துயரமும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். மனைவியை இழந்து வருந்தும் அன்பு சகோதரர் திரு பிரபாகர் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடியில் நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
English Summary
OPS and sasikala mourning for demise of wife of JCD Prabhakar