அண்ணாமலை மீது மேலும் ஒரு வழக்கு பதிவு.!!
One more Case filed against BJP candidate Annamalai
தமிழக பாஜக தலைவரும் கோவை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை மீது போலீசார் மேலும் ஒரு தேர்தல் நன்னடத்த விதிமீறல் வழக்கை பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் ஆவாரம்பாளையத்தில் நேற்று இரவு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.
தேர்தல் விதிகளை மீறி பத்து மணிக்கு மேல் அவர் பிரச்சாரம் செய்த நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்த வில்லை. இந்நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த சிலர் 10 மணிக்கு மேல் அண்ணாமலை பிரச்சாரம் செய்ய அனுமதித்ததாக காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்து பாஜகவினர் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இரு தரப்பினரையும் காவல்துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு ஆவாரம்பாளையத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது பீளமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
One more Case filed against BJP candidate Annamalai