#BigBreaking || 35 தொகுதிகளுக்கு வேட்பாளர்களின் பெயர்களை அதிரடியாக அறிவித்த சீமான்.! கூட்டணியா? தனித்தா?!
NTK Announcement jan 22
வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக 35 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடக்கவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசு அரசியல் கட்சிகள் யாருடன் கூட்டணி, யாருக்கு எந்த தொகுதி, புதிய பொறுப்பாளர் நியமனம், கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை, முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை கூட்டங்கள் என சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன.
அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அமமுக, நாம் தமிழர், கமலின் மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகள் தனித்தும் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக 35 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை,மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..
வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்றும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார்.