உங்களின் அடுத்த பிரதமராக நரேந்திர மோடியா? ராகுல் காந்தியா? - தமிழக மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவு.! - Seithipunal
Seithipunal


தமிழக மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி குறித்து சிவோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. இந்த கருது கணிப்பு முடிவுகளின்படி, 

40 சதவீதத்துக்கும் அதிகமானோர் பிரதமரின் செயல்பாட்டில் திருப்தி இல்லை என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

17 சதவீதம் பேர் திருப்தி என்றும், 40 சதவீதம் பேர் ஓரளவு திருப்தி என்றும் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், வருங்காலத்தில் பிரதமராக பதவியேற்க பொருத்தமானவர் நரேந்திர மோடியா? ராகுல் காந்தியா? என்றும் கேள்வி கேட்கப்பட்டு தமிழகத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. 

இந்த கருத்து கணிப்பு முடிவுகளின்படி, ராகுல் காந்திக்கு 54 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும், சிவோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, இந்தியாவின் தென் மாநிலங்களில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான  மு.க.ஸ்டாலின் பிரபலமான தலைவராக உருவெடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவதாக 85 சதவீதம் பேர் பாராட்டு தெரிவித்துள்ளனர். 51 சதவீதம் பேர் திருப்தி என்று தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

next pm for u in tn poll


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->