வெளியான மரண செய்தி.. வேதனையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி.!!
news editor parthiba maharaj passed away
தினமலர் நாளிதழின் எழும்பூர் அலுவலகச் செய்தி ஆசிரியர் பார்த்திப மகாராஜன் அவர்கள் உயிரிழந்ததையடுத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஊடகத்துறையில் 30 ஆண்டுகாலம் பணியாற்றிப் பங்களித்தவரும் தினமலர் நாளிதழின் எழும்பூர் அலுவலகச் செய்தி ஆசிரியருமான திரு. பார்த்திப மகாராஜன் அவர்கள் மதுரை அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார் என்று அறிந்து வேதனையடைந்தேன்.
திரு.பார்த்திப மகாராஜன் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஊடகத்துறை நண்பர்களுக்கும் இத்துயர்மிகு நேரத்தில் எனது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
பார்த்திப மகாராஜன் மறைவிற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தினமலர் நாளிதழின் சென்னை, எழும்பூர் அலுவலக செய்தி ஆசிரியர் திரு.பார்த்திபன் அவர்கள் உடல்நலக் குறைவால் மதுரையில் நேற்று இரவு அப்போலோ மருத்துவமனையில் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரமடைந்தேன். மூத்த நிருபரும் செய்தி ஆசிரியருமான சுமார் 30 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றி சிறந்த சேவை புரிந்த திரு.பார்த்திபன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது திடீர் மறைவால் அல்லலுறும் அவரது குடும்பத்தினருக்கு தகுந்த நிதியுதவியினை வழங்க வேண்டுமென்று இந்த அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
English Summary
news editor parthiba maharaj passed away