திமுகவில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்.! காய் நகர்த்தும் நேரு.! திமுக தலைமை எடுத்த முடிவு.!  - Seithipunal
Seithipunal


டி.ஆர்.பாலு நாடாளுமன்ற திமுக எம்பிக்கள் குழுத் தலைவராக பொறுப்பு வகிக்கும் காரணத்தினால் திமுக முதன்மை செயலாளராகப் பொறுப்பில் இருந்த டி.ஆர்.பாலு அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக திருச்சி மாவட்ட திமுக செயலாளராக பதவிவகித்த கே.என்.நேரு முதன்மை செயலாளராக நியமிக்கபடுவதாக திமுக தலைமை அறிவித்தது.

சமீபத்தில் நடந்த முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டத்தின் 14 இடங்களையும் திமுக கைப்பற்றியதால் கே.என்.நேருவிற்கு திருச்சி மாவட்ட செயலாளர் பதிவிலிருந்து முதன்மை செயலாளர் பதவியை ஸ்டாலின் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மறைந்த அன்பில் தர்மலிங்கத்தின் பேரன் அன்பில் மகேஷ் திருச்சியின் மூன்று மாவட்ட செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார், இதையடுத்து அன்பில் மகேஷ் வகித்து வந்த இளைஞர் அணி துணைச் செயலாளர் பொறுப்பை டி.ஆர்.பாலுவின் மகனும் மன்னார்குடி தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான டி.ஆர்.பி.ராஜாவுக்கு கொடுக்க திமுக தலைமை தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக திருச்சி  மாவட்ட செயலாளராக பதவி வகித்து தற்போது மாநில பொறுப்புக்கு வந்திருக்கும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாவட்ட அரசியலை தனது கட்டுப்பாட்டில் இருந்து போய்விடக்கூடாது என தன் மகனான அருணை திருச்சி மாவட்ட அரசியலில் பெரிய ஆளாக்க அக்கறை காட்டி வருவதாக தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new post for trbalu son in dmk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->