இந்த "ஏழைத்தாயின் மகன்" சேவை செய்யவே வந்துள்ளேன்.. நரேந்திர மோடி உருக்கம்.!
Narendra Modi meltdown have come to serve poor woman son
நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பாஜகவுக்காக வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர் "மோடி என்பவர் பொழுதுபோக்குக்காகவும் கேளிக்கை விஷயங்களுக்காகவும் பிறந்தவர் அல்ல. கடின உழைப்புக்காக பிறந்தவர். ஏழைத்தாயின் மகனாக பிறந்த நரேந்திர மோடி ஏழைக்கு சேவை செய்வதற்காகவே வந்திருக்கின்றேன்" என உருக்கமாக பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
English Summary
Narendra Modi meltdown have come to serve poor woman son