புதுச்சேரியில் திமுக ஆட்சி.. ஸ்டாலினுக்கு ஆதரவாக பேசிய நாராயணசாமி.!  - Seithipunal
Seithipunal


இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயண சாமியிடம் புதுச்சேரியில் திமுக ஆட்சி உதயமாகும் என முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதில் அளித்த அவர், "புதுச்சேரியில் திமுக ஆட்சி உதயமாகும் என்று ஸ்டாலின் கூறியதில் தவறில்லை. ஒவ்வொரு கட்சியும் தாங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். சமீபத்தில் நடந்த குஜராத் தேர்தலில் கூட ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைப்போம் என்று கூறினார்கள்."என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே புதுச்சேரி மாநிலத்தில் மதசார்பற்ற கூட்டணியில் காங்கிரஸ் மட்டும் தான் தலைமை வகிக்கும் வேறு எந்த கட்சியும் தலைமை பதவியில் அமர முடியாது என்று நாராயணசாமி திட்ட வட்டமாக தெரிவித்திருந்த நிலையில், மு க ஸ்டாலினின் இந்த கருத்தை இவர் ஆதரித்து இருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

முன்னதாக புதுச்சேரி திமுக மாநில அமைப்பாளர் சிவா பேசிய போது திமுகவிற்கு காங்கிரஸ் தலைமை தாங்க முடியாது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Narayanasamy about Stalin About pidhucherry DMK 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->