கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம், அடித்து நொறுக்கிய திமுக உடன்பிறப்பு! சிசிடிவி காட்சிகள் வைரல்! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் பெரிய கடைவீதியில், சித்த மருத்துவர் திருவருள் கமல ஆறுமுகம் என்பவர், ஆங்கில மருந்துகள், சித்த ஆயுர்வேத மருந்துகள் கடை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் மணல்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவராகவும் பணியாற்றி வருகிறார்.

வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் நாகை மறுத்து கடையில் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சையும் கமல ஆறுமுகம் அளித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கமல ஆறுமுகத்திற்கும், அதே பகுதியில் பழக்கடை நடத்தி வரக்கூடிய சண்முகம் அவரின் மகன் மணிமாறன் ஆகியோருக்கு இடையே நில ஆக்கிரமிப்பு பிரச்சனை ஒன்று இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நில ஆக்கிரமிப்பு விவகாரம் குறித்து நாகப்பட்டினம் நகர காவல் நிலையத்தில் திருவருள் கமல ஆறுமுகம் புகார் ஒன்றை எதிர் தரப்பினர் மீது அளித்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று இரண்டு தரப்பினரையும் பேச்சு வார்த்தைக்கு காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்துள்ளனர். அப்போது பழக்கடை சண்முகம் தரப்பில் திமுக வார்டு செயலாளர் பாபுவை சண்முகம் தரப்பு துணைக்கு அழைத்து வந்துள்ளனர்.

காவல் நிலையத்தில் நடந்த இந்த சமரச பேச்சு முடிவு எட்டாத படை நிலையில், அன்று இரவு திமுக வார்டு செயலாளர் தனது அடியாட்களுடன் கமல ஆறுமுகம் கடையை அடித்து நொறுக்கியுள்ளார்.

மேலும் தடுக்க வந்த மருத்துவரையும், அவரின் தாயாரையும் திமுக நிர்வாகி தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagai DMK member babu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->