முத்தரசனுக்கு என்னாச்சு? மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி.!!
Mudrasan admitted to RajivGandhi govt hospital for further treatment
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி!!
கடந்த வாரம் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்தரசனுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு ப்ளு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து முத்தரசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பல்துறை மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். முத்தரசனுக்கு 73 வயதாகும் நிலையில் ப்ளு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அக்கட்சியினர் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே ப்ளு காய்ச்சல் பாதிப்பிலிருந்து முத்தரசன் மீண்டும் விட்டதாகவும், தற்போது மருத்துவர் கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், கூடிய விரைவில் அவர் வீடு திரும்புவார் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.
English Summary
Mudrasan admitted to RajivGandhi govt hospital for further treatment