கச்சத்தீவு விவகாரம் || மீனவர்கள் மீது பாச நாடகமா? மோடிக்கு மு.க ஸ்டாலினின் பதிலடி.!! 
                                    
                                    
                                   MKStalin questioned to Narendra Modi on katchatheevu issue
 
                                 
                               
                                
                                      
                                            கச்சத்தீவு உரிமையை தாரை வார்த்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சியையும் திமுகவையும் பிரதமர் நரேந்திர மோடி கடும் விமர்சனம் செய்து உள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மு.க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் "பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான். 

1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?
2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?
3. பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?
திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே..." என பதிலடி கொடுத்துள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       MKStalin questioned to Narendra Modi on katchatheevu issue