எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் வீட்டு வேலைகள் எல்லாம் செய்ய முடியாது - அமைச்சர் ராஜகண்ணப்பன் சர்ச்சை பேச்சு.!
Minister rajakannappan speech in Ramanathapuram
எம்பி, எம்எல்ஏக்கள் வீடு வீடாக சென்று உங்கள் வீட்டு வேலைகளை செய்ய முடியாது என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் துறைமுகத்தில் மீனவர்களுக்கு மானிய விலை டீசல் பங்க் திறப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன் 'அரசு மீதும் நிர்வாகம் விதம் எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் விதம் பொதுமக்களிடம் இருந்து விமர்சனம் வருவது சாதாரணம் தான். அதற்காக எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொண்டு தான் வருகிறார்கள்.
அதற்காக வீடு வீடாக சென்று வீட்டு வேலைகளை செய்ய முடியாது. மக்களுக்கு என்ன தேவை என்பதை சரியாக செய்து வருகிறோம். இந்த தொகுதி எம்பி நவாஸ்கனி அவர்கள் சிறப்பாக செய்து வருகிறார்' என பேசியுள்ளார்.
தற்போது அமைச்சரின் இந்த பேச்சு விழாவில் பங்கேற்ற பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அமைச்சர் பொன்முடி ஓசி பஸ் என கூறியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Minister rajakannappan speech in Ramanathapuram