ஸ்டாலினுக்கு ஆப்பு வைக்க தயாரான அமைச்சர்! கலக்கத்தில் திமுக!
Minister CV shanmugam press meet in kodanad issue
டெல்லியில் நேற்று முன்தினம் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பத்திரிகையாளர் சாமுவேல் மேத்யூஸ், அவர் உருவாக்கிய வீடியோவை வெளியிட்டார். அந்த காணொலியில் கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளைகள் குறித்தும் அதன்பிறகு நடைபெற்ற ஜெயலலிதா வாகன ஓட்டுனரின் மரணம் உள்ளிட்டவை குறித்து தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கொடநாடு மரணங்கள் தொடர்பாக வெளியான வீடியோ விவகாரத்தில், தமிழக மூத்தவர் அளித்துள்ள பெட்டியில், இந்த காணொளி உண்மைக்கு புறம்பானது, என்னை அரசியலில் நேரடியாக எதிர்க்க முடியாதவர்கள் செய்யும் சூழ்ச்சி என்று தெரிவித்திருந்தார்.
நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா அவர்கள், முறையான விசாரணை நடைபெற்றால், தமிழக முதல்வர் தான் குற்றவாளி என்று உறுதி செய்யப்படுவார் என்று பரபரப்பாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், விழுப்புரத்தில் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் சட்ட துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை,
கொடநாடு விவகாரத்தில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றனர் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அண்ணாநகர் ரமேஷ், சாதிக் பாஷா கொலையை விசாரிக்க மு.க.ஸ்டாலின் தயாராக உள்ளாரா? என்றும் சி.வி. சண்முகம் கேள்வி எழுப்பினார்.
English Summary
Minister CV shanmugam press meet in kodanad issue