#BREAKING || அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் இல்லை!! கைவிரித்த உயர் நீதிமன்றம்!!
MadrasHC denied Senthil Balaji bail
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜூன் மாதம் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து 3000 பக்கங்கள் கொண்ட சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
இதற்கிடையே ஜாமீன் வழங்க கோரி செந்தில் பாலாஜி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் தரப்பு மற்றும் அமலாக்கத்துறையின் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் சற்று முன்னர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அந்த தீர்ப்பை மருத்துவ காரணங்களுக்காக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க முடியாது, செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக இருப்பதாலும், செந்தில் பாலாஜி தற்போது வரை அமைச்சராக தொடர்ந்தாலும் சாட்சியை கலைக்க வாய்ப்புள்ளது எனக்கூறி நீதிபதி ஜெயச்சந்திரன் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.
English Summary
MadrasHC denied Senthil Balaji bail